Friday, May 18, 2018

ANBODU VANTHOM KANIKKAI THANTHOM LYRICS


அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் 
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே
உம் பலியோடு சேர்ப்பாய் தூயவனே -2

பொன்னான வாழ்வை புடமிட்டு வைத்தோம்
பூவாக மணம் வீச வைத்தோம் -2
புதிரான வாழ்வே எதிரானதாலே -2
பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே
உம் அருளோடு அணைப்பாய் மாபரனே

அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைத்தோம் -2
திரியாகக் கருகி மெழுகாக உருகி  -2
பலியாக வைத்தோம் ஆண்டவனே
புது ஒளியாக மாற்றும் தூயவனே

No comments: