Friday, May 18, 2018

ADIYOR YAAM THARUM KANIKKAIYAI LYRICS


அடியோர் யாம் தரும் காணிக்கையை 
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே

பாவியென்றெம்மைப் பாராமல் - யாம் 
பாவத்தின் தீர்வையை அடையாமல் --2
பரிகாரம் என ஏற்றிடுவாய்
பலியாய் எமை நீ மாற்றிடுவாய்

மேலொரு வாழ்வு உண்டு என்று - எம்
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம்  --2
மேலும் துன்பங்கள் அடைந்தாலும்
மேன்மையின் பலியாய்த் தருகின்றோம்

வாழ்வுக்கு ஒரு நாள் முடிவு உண்டு - பின்
வாழ்வினில் எமக்கென்று எது உண்டு --2
என் மனம் அறிந்தவர் பயன் என்னவோ
எல்லாம் அறிந்தவர் நீரல்லவோ

No comments: