Friday, May 18, 2018

THIRUKKULAMAE ELUNTHIDUGA ARUL POLIYUM LYRICS


திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே 
ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம் உன்னதரைப் போற்றுவோம் 
ஆகா சந்தோஷம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே - 2 

ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் - 2 
ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம் - 2 
அவரே நம்மை படைத்தார் அவருக்கே சொந்தம் நாம் 
அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம் 
அவர் மந்தையின் ஆடுகள் நாம் 

இன்னிசை முழங்க இறைவன் வாசல் நுழைந்திடுவோம் - 2 
பண்ணிசையோடு அவரது பீடம் சூழ்ந்திடுவோம் - 2 
அவரைப் புகழ்ந்திடுவோம் அவர் பெயர் வாழ்த்திடுவோம் 

அவர் நல்லவராம் அவர் வல்லவராம் அவர் அன்பே நமை நடத்தும் 

No comments: