Friday, May 18, 2018

ENGAL KAVALAM SOOSAI THANTHAIYIN LYRICS


எங்கள் காவலாம் சூசை தந்தையின்
மங்களங்கள் எங்கும் சொல்லி இங்குப் பாடுவோம் -2
செங்கை அதிலே தங்க புஷ்பம்
தங்கும் கோலை ஏந்திடும் -2

கன்னித் தாயாரின் பர்த்தா நீயல்லோ
உன்னதமார் பேறும் மாட்சி உற்ற பாக்கியனே  -2
சென்னி மகுட முடி புனைந்த
மன்னர் கோத்ர மாதவா  -2

இயேசு நாதரின் செல்வத் தாதை நீ
நேச புத்திர துதியாம் பாடக் கூடி வந்தோமே -2
தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும்
ஆசைகொண்டு பாடவே  -2

தந்தை என்றுன்னை வந்து பாடினோம்
உந்தன் மைந்தன் சொந்தமென்று எம்மை காத்திட்டாய்  -2
அந்திக்காலை வந்த வேளை

வந்து உதவி செய்திட்டாய்   -2

No comments: