Friday, May 18, 2018

THALAIVA UNAI VANANKA LYRICS

தலைவா உனை வணங்க - என்
தலைமேல் கரம் குவித்தேன்
வரமே உனைக் கேட்க - நான்
சிரமே தாள் பணிந்தேன்

அகல்போல் எரியும் அன்பு - அது
பகல்போல் மணம் பரவும்
நிலையாய் உனை நினைத்தால் - நான்
மலையாய் உயர்வடைவேன் - 2

நீர்போல் தூய்மையையும் - என்
நினைவில் ஓடச் செய்யும்
சேற்றினில் நான் விழுந்தால் - என்னைச்

சீக்கிரம் தூக்கிவிடும் - 2

No comments: