Friday, May 18, 2018

MATHUMALAR NIRAIKODI KAIYILANTHUM LYRICS


மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் 
மாட்சிமை நிறைசூசை மாமுனியே 
துதிவளர் உமது நற்பதம் வந்தோம் 
துணை செய்து எமையாளும் தாதையரே 

வானுலகிழந்ததால் கர்வமுற்ற 
வன்மனக் கூளியின் வலையறுக்க 
தான் மனுவாய் உதித்த கடவுள் 
தாதையாம் சூசை உன் தஞ்சம் வந்தோம் 

ஒளிநிறை கதிரோனை ஆடை எனும் 
உடுவதைத் தலையிலும் முடிபுனைந்த 
துளிநிகர் அருள்பொழி மாமரியாள் 
துணைவனாம் சூசை உன் துணைபுரிவாய் 

தூதர் வானோர்க்கு மேலாய் உயர்ந்து 
துலங்கும் சிம்மாசனந் தனிலிருந்து 
ஆதிரையோரைக் கண் பார்த்துனது 

ஆசியை அளித்தருள் மாதவனே

No comments: