Friday, May 18, 2018

ULAGAMELLAM ENAKKATHAYAM ENA VAZHNTHAVAR LYRICS


உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை 
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை - 2 
அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவைக் காப்பதா - 2 
இந்த கேள்விக்குப் பதிலாய் வாழ்ந்தவர் யார் 
அவரே புனித சவேரியார் 

பொன்னும் பொருளும் தேடுகிறோம் 
பட்டம் பதவியை நாடுகிறோம் - 2 
எதுவும் நிறைவு தருவதில்லை எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை 
முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் - 2 

அறிவும் திறனும் அமைவதில்லை 
உறவும் நட்பும் தொடர்வதில்லை - 2 
தேடும் எதுவும் கிடைப்பதில்லை 
கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை

முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லா ஆன்மாதான் - 2  

No comments: