படைத்ததெல்லாம் தரவந்தோம்
பரம் பொருளே உம் திருவடியில் --2
உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும்
என் வாழ்வினிலே ஒளி வீசும்
உழைப்பினில் கிடைத்திட்ட பொருளெல்லாம்
உன்னதரே உந்தன் மகிமைக்கே --2
தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய் --2
தாழ்ந்து பணிந்து தருகின்றோம் தருகின்றோம் --2
வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம்
வல்லவரே உந்தன் மகிமைக்கே --2
கருணையின் தலைவா ஏற்றிடுவாய் --2
கனிவாய் உவந்து தருகின்றோம் தருகின்றோம் --2
No comments:
Post a Comment