எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா (2)
ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே (2)
எப்படி நான் ஜெபிக்கவேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத் தாரும் ஆவியானவரே (2)
வேத வசனம் புரிந்து கொண்டு விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே (2) -ஆவியானவரே
கவலை கண்ணீர் மறக்கணும் கர்த்தரையே நோக்கணும்
கற்றுத்தாரும் ஆவியானவரே (2)
செய்த நன்மை நினைக்கணும் நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே (2) -ஆவியானவரே
No comments:
Post a Comment