Friday, May 18, 2018

AZHAIKKUM IRAIVAN KURALAI KAETTU LYRICS


அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்
அழைக்கும் அவரில் சங்கமமாக விரைந்து வாருங்கள் - 2
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே - 2
படைத்த தேவன் புகழைப் பரப்ப பணிந்து வாருங்கள்

பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் -2
அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே -2
பரமதேவன் புகழைப் பரப்ப பணிந்து வாருங்கள்

வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்
வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார் - 2
நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே - 2
இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள் 

No comments: