Friday, May 18, 2018

ARPANA MALARAI VANTHAEN LYRICS


அர்ப்பண மலராய் வந்தேன் 
அர்ச்சனை ஆக்கினேன் என்னை - 2 
மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே போனாலும் - 2 
வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் - அந்த 
ஜோதியில் நிறைவு கொள்வேன் - 2

கோதுமை மணியாய் மடிந்து - என்னை 
வெண்ணிற அப்பமாய் தந்தேன் - 2 
என்னுடல் உன்னுடலாகிடவே உன்னுடலாய் நான் மாறிடவே 
மகிழ்வுடன் தந்தேனே என்னை கனிவுடன் ஏற்பாயே 

விதியென்னும் சகதியில் சாய்ந்தேன் - புவி 
அதிபதி உன் திட்டம் மறந்தேன் - 2 
மதியில்லாதவன் ஆனாலும் கதியிழந்தே நான் போனாலும் 

சுதியுடன் சேர்த்துக்கொள்வாய் நான் ஜதியுடன் பாட்டிசைப்பேன்

No comments: