நல்ல காலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு
புனிதர் கோயில் தொறந்திருச்சு நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு
பாமாலை பாடிடுவோம் சவேரியாரே - உங்க
பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே - உமக்கு
கோவில்கட்டி கும்பிடுவோம் சவேரியாரே
இயேசுசாமி வார்த்தைகளை பேசி வந்த போதகரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே - 2
இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே - 2
இறைவன் தந்த அருங்கொடையே சவேரியாரே
வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே
தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே
நற்செய்தி போதித்த சவேரியாரே - 2
நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் - 2
ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே -வாழியவே
கட்டுமர ஓடத்திலே கடல் மீது போகையில
கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே - 2
அலையோடு போராடி வலைவீசும் வேளையிலே - 2
நல்லாசி தந்திடுமே சவேரியாரே -வாழியவே
No comments:
Post a Comment