Friday, May 18, 2018

PAAMALAI PADIDUVOM SAVARIYARAE LYRICS


நல்ல காலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு 
புனிதர் கோயில் தொறந்திருச்சு நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே - உங்க 
பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே 
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே - உமக்கு 
கோவில்கட்டி கும்பிடுவோம் சவேரியாரே 

இயேசுசாமி வார்த்தைகளை பேசி வந்த போதகரே 
இறையரசின் தூதுவரே சவேரியாரே - 2 
இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே - 2 
இறைவன் தந்த அருங்கொடையே சவேரியாரே 

வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க 
விசுவாச நாயகனே சவேரியாரே 

தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே 
நற்செய்தி போதித்த சவேரியாரே - 2 
நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் - 2 
ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே -வாழியவே 

கட்டுமர ஓடத்திலே கடல் மீது போகையில 
கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே - 2 
அலையோடு போராடி வலைவீசும் வேளையிலே - 2 
நல்லாசி தந்திடுமே சவேரியாரே -வாழியவே 

No comments: