Friday, May 18, 2018

THAYAI SEIVAI NAATHA LYRICS

தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி
தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி

அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும்
அனுதபித்து என் பிழையை அகற்றுமைய்யா
பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும்
தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும் -தயை செய்வாய் 

என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல்
தீவினையை மறவாதென் மனது என்றும்
உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன்
நீர் தீமையென்றுக் கருதுவதைத் துணிந்து செய்தேன் -தயை செய்வாய் 

உள்ளத்தில் உண்மையை நீர் விரும்புகிறீர்
என் ஆத்துமத்தில் அந்தரத்தில் அறிவையூட்டும்
என் பாவம் தீர்ப்பாயின் தூய்மையாவேன்

பனிவெண்மைக்கு உயர்வாகப் புனிதமாவேன் -தயை செய்வாய்

No comments: