Friday, May 18, 2018

ANBIN PALIYAI YERPAI LYRICS


அன்பின் பலியாய் ஏற்பாய் - உன்னை 
அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய் 
புண்படும் மனதின் துயர் தணிப்பாய் - எமைப் - 2 
புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய் 

வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் - அருள் 
வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம் - 2 
முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் - 2 - எமைத் 
திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம் 

படைப்பின் மீதே பரிவிருக்க - அந்தப் 
பரிவால் உன் மகன் உயிர் கொடுக்க - 2 
படைப்பே உன்னால் மகிழ்ந்திருக்க - 2 - உனில் 

படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க

No comments: