Saturday, May 19, 2018

ORU THARAM ORE THARAM LYRICS



ஒருதரம் ஒரே தரம் இதயத் தூய்மை வேண்டும் 
இறைவரம் நிரந்தரம் உதயம் காண்பேன் மீண்டும் - 2 
முறிந்த உறவு துளிர காய்ந்த இதயம் குளிர 
மனதில் அமைதி நிலவ தூய அன்பு மலர - 2


இருளில் பிறந்து அருளில் வளர்ந்து மகனாய் வாழ்ந்த காலம் 
பின்பு பிரிந்து திரிந்த காலம் - 2 
இனியொரு தரம் இறைவனின் கரம் 
விலகிடின் என்ன சுகம் சொல் மனமே - 2

உலக வாழ்வில் உறவும் பிரிவும் விலக்கு இல்லா நியதி 
அதை மறுப்போர் இல்லை உறுதி - 2 
தினம் அவர் தரும் உறவினில் வரும் 
சுகமோ என்ன சுகம் என் மனமே - 2 

No comments: