Saturday, May 19, 2018

ISAI ONTRU ISAIKKINTREN LYRICS


இசை ஒன்று இசைக்கின்றேன்
இறைவா எளிய நல்குரல் தனிலே - 2
என் இதயத் துடிப்புக்களோ - என்
இசையின் குரலுக்குத் தாளங்களே - 2

காலத்தின் குரல்தனில் தேவா - உன்
காலடி ஓசை கேட்கின்றது - 2
ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2
மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் மலர்ந்திடும் மண்ணிலே

ஏழையின் வியர்வையில் இறைவா - உன்
சிலுவையின் தியாகம் தொடர்கின்றது - 2
சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2

உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது விடியலின் ஆரம்பம்

No comments: