Saturday, May 19, 2018

AMMA NEE THANTHA JEBAMALAI LYRICS


அம்மா நீ தந்த ஜெபமாலை 
ஜெபிக்கும் நாளெல்லாம் சுபவேளை 
அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம் 
மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம்


சந்தோஷ தேவ இரகசியத்தில் 
தாழ்ச்சியும் பிறரன்புமாய் நின்றாய் 
எம் தோஷம் தீர இயேசுபிரான் 
உம் அன்பு மகனானார் அவரை 
காணிக்கை வேண்டி புலம்பியதும் 
வீணாகவில்லை தாய்மரியே 
உம் வாழ்வு எமக்கு முன்மாதிரியே


துயர்நிறை தேவ இரகசியத்தில் 
தூயவரின் வியாகுலங்கள் கண்டோம் 
உயர் வாழ்விழந்த எமக்காக 
உன் மைந்தன் உயிர் தந்தார் அவரை 
சாட்டைகளும் கூர் முள்முடியும் 
வாட்டிய சிலுவைப்பாடுகளும் 
சாய்த்திட்டக் கோரம் பார்த்தாயம்மா 
தாய் நெஞ்சம் நொறுங்கியதார் அறிவார்

மகிமையின் தேவ இரகசியத்தில் 
மாதா உன் மாண்பினைக் கண்டோம் 
சாகாமை கொண்ட நின் மகனார் 
சாவினை வென்றெழுந்தார் அவரே 
தூயாவியால் உன்னை நிரப்பியதும் 
தாயுன்னை வானுக்கு எழுப்பியதும் 
மூவுலகரசி ஆக்கியதும் 
மாதா உன் அன்புக்குத் தகும் பரிசே 

No comments: