Saturday, May 19, 2018

UNNAI NAMBI VAZHUM POTHU LYRICS



உன்னை நம்பி வாழும் போது உறுதி பெறுகிறேன்
உன் பணியைச் செய்யும் போது நிறைவு அடைகிறேன்
உன் வழியில் செல்லும் வாழ்வில் அமைதி காண்கிறேன்
இறைவா இறைவா அமைதி காண்கிறேன்
நிறைவு அடைகிறேன் நான் அமைதி காண்கிறேன்

என்னை மட்டும் நம்பும் போது இடறி விழுகிறேன்
எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கிறேன் - 2
என்னுள் வாழும் உன்னை நம்பி எழுந்தடி வைத்தேன் - 2
இனி இமயமெனத் தடைவரினும் எளிதாய் கடப்பேன்
எளிதாய் கடப்பேன் நான் எளிதாய் கடப்பேன்

இருளின் சக்தி எந்தன் வாழ்வைப் பணியச் சொல்லுதே
இறைவா உன் நினைவு என்னைத் துணியச் சொல்லுதே
உன் சொல்லின் உறுதியினால் பயணம் செல்லுவேன் - 2
உண்மை அன்பு நீதியில் நான் என்றும் வாழுவேன்

என்றும் வாழுவேன் நான் என்றும் வாழுவேன்

No comments: