Saturday, May 19, 2018

KATTHUM ALAIKADAL OORATHILAE LYRICS



அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர் 
இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா 
ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே 
இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே 

கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே - 2 
சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே 
ஆரோக்கியம் தந்தவளே அம்மா - 2

வித்தகன் இயேசுவைப் பெற்றவள் நீயே 
உத்தமர்க்கெல்லாம் நீ உற்றவள் தாயே - 2 
சத்திய சன்மார்க்கம் தழைக்கச் செய்தாயே - 2 
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீயே 
இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீ

நித்தம் உன் தாள் தேடி வருவார்கள் கோடி 
நெஞ்செல்லாம் இனித்திடும் சுவையாகப் பாடி - 2 
முக்திக்கு வழிசொன்ன இறைமகன் தாயே - 2 
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீயே 
சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீ 

No comments: