Saturday, May 19, 2018

ANBAE ENTRANAVA EN ENNAM LYRICS


அன்பே என்றானவா என் எண்ணம் நிறைவானவா 
உன் மேன்மை வானம் என்றாகினாலும் 
என் ஏழ்மை குறை தீர்த்தவா - 2


வளம் காய்ந்து நிழல் தேடும் நேரங்களில் 
வளமோடு எனைச் சூழும் நதியாகிறாய் 
பிரிந்தோடி மனம் வாடும் வேளைகளில் 
எனைத் தேற்றும் புது வாழ்வு மழையாகிறாய் 
மலை போன்ற உன் அன்பு முன்னாலேதான் - 2 
என் தாழ்வை உன் மாண்பை நான் காண்கிறேன் - 2

உன் பாதநிழல் போதும் என ஏங்கினேன் 
உன் நெஞ்சமலராலே எனை மூடினாய் 
கண் பார்வை அருள் போதும் என நாடினேன் 
என் பாதை வழி செல்லும் துணையாகினாய் 
மண்மீது காலூன்றும் தொடுவானமாய் - 2 
என்மீது நீ வந்து நானாகிறாய் - 2 

No comments: