Saturday, May 19, 2018

GNANAM NIRAI KANNIKAIYAE LYRICS

ஞானம் நிறை கன்னிகையே 

நாதனைத் தாங்கிய ஆலயமே
மாண்புயர் எழு தூண்களுமாய்
பலி பீடமுமாய் அலங்கரித்தாயே – ஞானம்

பாவ நிழலே அணுகா
பாதுகாத்தான் உன்னையே பரமன்
தாயுதரம் நீ தரித்திடவே
தனதோர் அமல தலமெனக் கொண்டார் – ஞானம்

வாழ்வோர் அனைவரின் தாயே
வானுலகை அடையும் வழியே
மக்கள் இஸ்ராயேல் தாரகையே
வானோர் துதிக்கும் இறைவியே வாழி – ஞானம்

No comments: