Saturday, May 19, 2018

ANNAIKKU KARAM KUVIPPOM LYRICS

அன்னைக்குக் கரம் குவிப்போம்

அவள் அன்பைப் பாடிடுவோம் – 2

கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்த
முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2)
மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் – 2
தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்

பாவமதால் மனிதன் அருளிழந்தான் – அன்று
பாசமதால் அன்னை கருணை கொண்டாள் (2)
பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் -2
பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்

No comments: