Saturday, May 19, 2018

EN ULLAM KAVI ONTRU PAADUM LYRICS


என் உள்ளம் கவியொன்று பாடும் - உந்தன்
அன்பொன்றே அது என்றும் நாடும் - 2
இன்பங்கள் நதியான வெள்ளம்
இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்
ஆனந்த கவிபாடித் துள்ளும் - 2

உன்னோடு ஒன்றாகும் நேரம்
உலகங்கள் சிறிதாகிப் போகும் - 2
நான் என்பதெல்லாமே மாறும்
பிறர் சேவை உனதாக ஆகும்
எல்லாமே சமமாக எல்லோரும் நலமாய் - 2
அன்போன்றே ஆதாரமாகும்
விண் இன்று மண் மீது தோன்றும்

பிறர் காணும் இன்பங்கள் எங்கள்
இதயத்தை இசை மீட்டிச் செல்லும் - 2
வரம் என்று உனைக் கேட்பதெல்லாம்
உறவென்னில் உயிர் வாழத்தானே
என் சாயல் அன்று உன் சாயல் இன்று - 2
உன் முன்னே யாம் எல்லாம் ஒன்று

என்றாகும் நன்னாளும் தோன்றும்

No comments: