Saturday, May 19, 2018

ENNUYIRAE KALAKKAM KOLLATHAE LYRICS


என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே
காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் - 2

கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்
கரையாத அவரன்பு குறையாது - 2
கண்ணாக எந்நாளும் காத்திடுவார் - 2

துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்
துணையாளன் இருக்கின்றார் திகையாதே - 2
தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார் - 2

உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்
உலகாளும் மன்னவன் உனக்குண்டு - 2
என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார் - 2