Saturday, May 19, 2018

ANNAIYIN ARULTHIRU VATHANAM LYRICS


அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் - நம் 
அல்லல்கள் அகன்று விடும் - அவள் 
கண்களில் மின்னிடும் கருணையைக் கண்டால் 
கவலைகள் மறைந்து விடும்

வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும் 
தூய்மை தான் அவள் தோற்றம் - இன்று 
தேடா மானிடர் யாருளர் தரணியில் 
பாடார் அவள் ஏற்றம் -- 2 


பொன் தாள் வெண்ணிலா தாங்கிட வதனம் 
பொலிவால் திகழ்ந்தோங்கும் - இன்று 
செந்நீர் பாய்ச்சிய கரங்களில் எம்மை 
எடுத்தே அரவணைக்கும் -- 2 

No comments: