Saturday, May 19, 2018

YESUVE UNNAI KANAMAL LYRICS


இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது 
சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது
இயேசுவே உன்னைக் காணாமல் இமைகள் உறங்காது

கடலினைச் சென்று சேராமல் நதிகள் அடங்காது
உடல் எனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாது 
ஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாது 
உன்னை கண்டு பேசாமல் உள்ளம் அடங்காது
இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது
உள்ளம் அடங்காது         - இயேசுவே உன்னை

உயிர் தரும் தோழமை இல்லாமல் உறவுகள் தொடராது
தாங்கிடும் செடிகள் இல்லாமல் கொடிகள் படராது
கரங்களைப் பிடித்து நடக்காமல் பாதையில் பலமேது
சிறகதன் நிழலில் அமராமல் ஆறுதல் எனக்கேது
இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது

ஆறுதல் எனக்கேது        - இயேசுவே உன்னை

No comments: