Saturday, May 19, 2018

NEE ENTHAN PAARAI EN LYRICS


நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே 

ஒளிகொண்டு தேடினால் இருள் நில்லுமோ
உன்துணையில் வாழ்க்கையில் துயர்வெல்லுமோ-2
தடைகோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் -2
ஆனாலும் உன் வார்த்தை உண்டு - எது
போனாலும் உனில் தஞ்சம் உண்டு
இயேசுவே இயேசுவே - 2

இரவுக்கும் எல்லை ஓர் விடியல் அன்றோ
முடிவாக வெல்வதும் நன்மையன்றோ-2
தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் - 2
என்றென்றும் உன் ஆசி கொண்டு - வரும்
நல்வாழ்வை கண்முன்னே கண்டு
இயேசுவே இயேசுவே -2

No comments: