Saturday, May 19, 2018

ALAIKADALIN OOSAIYILAE ANBUMOZHI LYRICS



அலைகடலின் ஓசையிலே அன்புமொழி கேட்குதம்மா 
அன்னையவள் ஆலயத்தில் அருள் நிறைந்து காணுதம்மா --2


நொண்டி முடம் கூன் குருடு நோய்களெல்லாம் தீர்ந்திடவே --2 
அண்டி வந்த அனைவருக்கும் அருள்வழங்கும் அன்னையம்மா --2


கண்கவரும் ஆலயமும் காணிக்கைப் பொருளனையும் --2 
எண்ணில்லாக் கவிதைகளை என்றென்றும் கூறுதம்மா --2

வேளைநகர் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னையிவள் --2 
வேண்டும் வரம் தந்திடுவாள் வேதனைகள் தீர்த்திடுவாள் --2 

No comments: