Saturday, May 19, 2018

ANANDA MAZHAIYIL NANILAM MAHIZHA LYRICS


ஆனந்த மழையில் நானிலம் மகிழ மன்னவன் எழுகின்றான் - 2 
ஆயிரம் நிலவொளியோ எனை ஆண்டிடும் இறையரசோ 
அவனியை மாற்றிடும் அருட்கடலோ


மன்னவனே என் இதயம் பொன்னடி பதிக்கின்றான் 
விண்ணகமே என் இதயம் அன்புடன் அழைக்கின்றான் - 2 
இனி என் வாழ்விலே ஒரு பொன்னாளிதே 
பண்பாடவோ என்றும் கொண்டாவோ 
மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே 
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே - 3

சேற்றினிலே தாமரையாய் தேர்ந்தென்னை எடுத்தானே 
காற்றிலே நறுமணமாய் கலந்தென்னில் நிறைந்தானே - 2 
எனில் ஒன்றாகினான் நான் நன்றாகினேன் 
பணிவாழ்வுக்காய் என்னைப் பரிசாக்கினேன் 
மலர்கின்ற புதுவாழ்விலே இனி சுகமான புதுராகமே 
என்றென்றும் உண்டாகும் பேரின்பமே - 3 

No comments: