Saturday, May 19, 2018

IRAIVA NEE ORU SANGEETHAM LYRICS


இறைவா நீ ஒரு சங்கீதம் - அதில்
இணைந்தே பாடிடும் என் கீதம்
உன் கரம் தவழும் திருயாழிசை - அதில்
என் மனம் மீட்டிடும் தமிழ் ஏழிசை

புல்லாங்குழலென தனித்திருந்தேன் - அதில்
இசையாய் என் மனம் புகுந்திடுவாய் - 2
பாவியென் நெஞ்சமும் துயில் கலையும் - புதுப்
பாடலால் என்னகம் இணைந்திடுமே
எரிகின்ற சுடராக விண்மீன்கள் உன் வானில்
எனை இன்று திரியாக ஏற்றாயோ இறைவா
காற்றாகி ஊற்றாகி கார்மேக மழையாகி
வாழ்வாகி வழியாகி வாராயோ இறைவா - 2

கல்லிலும் முள்ளிலும் கால் நடந்தாலும் - நீ
தோளினில் சுமந்தே வழிநடந்தாய் - 2
நாதா உன் வார்த்தைகள் வானமுதம் - 2 என்னை
நாளெல்லாம் வாழ்விக்கும் தேனமுதம்
தோள் மீது தாலாட்டும் தாயாகும் தெய்வம்
தாள் போற்றி நின்றாலே நூறாகும் செல்வம்
அருளாளன் நீயின்றி அழகேது என்னில்
அதை நானும் அடையாமல் விடிவேது மண்ணில் - 2

No comments: