படியேறி வருகின்றேன் தேவா - எனை
பலியாக்க வருகின்றேன் தேவா - நான்
படியேறி வருகின்றேன் தேவா
மகனையே பலியாகக் கேட்டாய் - ஆபிரஹாம்
மனமார பலியாக்க வந்தார்
மனதினை மாசின்றி கேட்டாய் - நான்
மகிழ்வோடு தருகின்றேன் உமக்கே
ஏழை நான் என்றேங்கி நின்றேன் - என்னை
நீ வேண்டும் வாவென்று சொன்னாய்
பிழை செய்து நான் வாழ்ந்த போது
தயை செய்து எனை ஏற்றுக் கொண்டாய்
No comments:
Post a Comment