உன் நாமம் சொல்ல சொல்ல என் நெஞ்சம் மகிழுதய்யா
என் வாழ்வில் மெல்ல மெல்ல உன் இன்பம் பெருகுதய்யா
மாணிக்க தேரோடு காணிக்கை வந்தாலும் உனக்கது ஈடாகுமா
உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும் உனக்கது ஈடாகுமா
தேனென்பேன் பாலென்பேன் தெவிட்டாத சுவையென்பேன்
உன் நாமம் என்னென்பேன்
நிறையென்பேன் இறையென்பேன் நீங்காத நிலயென்பேன்
உன் நாமம் என்னென்பேன்
No comments:
Post a Comment