இறைவனின் ஆவி நிழலிடவே
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே
என்னை அழைத்தார் அன்பில் பணித்தார்
அவர் பணியினை தொடர்ந்திடவே
வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும்
அடிமைகள் விடுதலை அடைந்திடவும்
ஆண்டவர் அரசில் துயரில்லை என
வான் அதிர பறை சாற்றிடவும் - எனை
குருடரும் ஒளியுடன் நடந்திடவும்
குவலயம் நீதியில் திளைத்திடவும்
அருள்நிறை காலம் அவனியிலே
வருவதை வாழ்வினில் காட்டிடவும் - எனை
No comments:
Post a Comment