Sunday, November 24, 2019

IRAIVANIN AAVI NIZHALIDAVE



இறைவனின் ஆவி நிழலிடவே 
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே 
என்னை அழைத்தார் அன்பில் பணித்தார் 
அவர் பணியினை தொடர்ந்திடவே 

வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும் 
அடிமைகள் விடுதலை அடைந்திடவும் 
ஆண்டவர் அரசில் துயரில்லை என 
வான் அதிர பறை சாற்றிடவும்எனை 

குருடரும் ஒளியுடன் நடந்திடவும் 
குவலயம் நீதியில் திளைத்திடவும் 
அருள்நிறை காலம் அவனியிலே 

வருவதை வாழ்வினில் காட்டிடவும் - எனை 

No comments: