அன்பென்னும் வீணையிலே நல் ஆனந்த குரலினிலே
ஆலய மேடையிலே உன் அருளினை பாடிடுவேன்
அகமெனும் கோவிலிலே என் தெய்வமாய் நீ இருப்பாய்
அன்பெனும் விளக்கேற்றி உன் அடியினை வணங்கிடுவேன்
வாழ்வெனும் சோலையிலே நல் தென்றலாய் நீ இருப்பாய்
தூய்மையெனும் மலரில் நான் தாழ்மையாய் வணங்கிடுவேன்
தென்றலே தவழ்ந்திடுமே என் தெய்வமே நீ இருக்க
இன்பமே மலர்ந்திடுமே நான் உன்னில் வாழ்ந்திருக்க
No comments:
Post a Comment