Sunday, November 24, 2019

IYARKAIYIL URAINTHIDUM INAIYATRA



இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா 
என் இதயத்தில் எழுந்திட வா 
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு 
காத்திடு என் தலைவா 

உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு  
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ 
மெழுகாகினேன் திரியாக வா 
மலராகினேன் மணமாக வா 

உருவில்லா இறைவன் உன் உதவியின்றி 
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ 
குயிலாகினேன் குரலாக வா

மயிலாகினேன் நடமாட வா 

No comments: