தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளி ஏற்றவா
கொஞ்சும் தமிழ் மொழி பேசி என்னை தேற்றவே (2)
பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா (2)
உன் அன்பு சாரலில் நனைந்தாலே போதும் இன்னல்கள் நீங்கிடுமே
உன் ஸ்வாச காற்றில் கலந்தாலே போதும் விண்வாசல் அடைந்திடுவேன்
நான் என்றும் உன் சாயல் தானே
உன் கோவில் குடி கொள்ள நீ வா
உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும் சுக ராகம் மீட்டிடுவேன்
உன் வார்த்தை கடலில் மிதந்தாலே போதும் யுகம் பல படைத்திடுவேன்
எல்லாமே நீதானே இறைவா
என்னுள்ள நிறைவாக நீ வா
No comments:
Post a Comment