இயேசுவின் இருதயமே - என்றும்
இறங்கிடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளும் சேர்ந்து வந்தால் - எங்கள்
ஆனந்தம் நிலை பெறுமே
இறைவனுக்கு இதயமுண்டு - அந்த
இதயத்தில் இறக்கமுண்டு - என்றும்
இறங்கிடும் இறைவன் இருப்பதினால் - எங்கள்
அனைவர்க்கும் வாழ்வு உண்டு
பாவிக்கு பொறுத்தல் உண்டு - அந்த
பரலோக வாழ்வு உண்டு - நாங்கள்
கூவிடும் குரலை கேட்பதற்கு - இந்த
கோவிலில் தெய்வமுண்டு
No comments:
Post a Comment