ஆண்டவரே, ஈசோப் புல்லினால் என்மேல் தெளிப்பீர்
நானும் தூய்மையாவேன்
நீரே என்னைக் கழுவ நானும்
உறைபனிதனிலும் வெண்மையாவேன்
இறைவா உமது இரக்கப் பெருக்கத்திற்கு ஏற்ப
என்மேல் இரக்கம் கொள்வீர்
பிதாவும் சுதனும் தூய ஆவியும்
துதியும் புகழும் ஒன்றாய்ப் பெருக
ஆதியில் இருந்தது போல
இன்றும் என்றும் நித்தியமாகவும் - ஆமென்.
No comments:
Post a Comment