Sunday, November 24, 2019

AATHIYUM NEERAE ANTHAMUM NEERAE

தேவாதி தேவனைப் பணிந்திடுவோம்

ஆதியும் நீரே அந்தமும் நீரே
மாறிடா நேசர் துதி உமக்கே
தேவ சபையில் வாழ்த்தி புகழ்ந்து
எந்நாளும் துதித்திடுவோம்

1.தூதர்கள் போற்றும் தூயவரே
துதிகளின் பாத்திரர் தேவரீரே
உந்தனின் சமூகம் ஆனந்தமே
உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம்

2.செய்கையில் மகத்துவம் உடையவரே
இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே
பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே
பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்

3.ஆண்டவர் இயேசுவைத் தொழுதிடுவோம்
ஆவியில் நிறைந்தே களித்திடுவோம்
உண்மையும் நேர்மையும் காத்தென்றுமே
உத்தம தேவனைப் பணிந்திடுவோம்

4.ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்
பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்
மகிமையும் கனமும் துதிகளையே
செலுத்தியே இயேசுவை துதித்திடுவோம்

No comments: