Sunday, November 24, 2019

DEEPATHIN OLIYINIL INAIVOM



தீபத்தின் ஒளியினில் இணைவோம் 
திருப்பலி செலுத்திட விரைவோம்
புனிதம் மலர்ந்திட மனிதம் மகிழ்ந்திட 

நல் வாழ்வின் தீபங்களாய் இங்கு நாளெல்லாம் ஒளிர வாருங்களேன் 
நம் வாழ்வின் தேவைகளை தினம் நல்லோர்க்கு இயேசு தந்திடுவார் 
அவரின் இல்லம் தினம் வந்தால் நம் உள்ளங்கள் ஒளியால் நிறைந்திடுமே 
அன்பு செய்யும் உள்ளங்களே இறைவனின் அருள் பெரும் இல்லங்களே 

இயேசுவோடு நாம் நடந்தால் என்றும் நம் வாழ்வில் தோல்விக்கு இடம் இல்லையே 
நன்மை செய்து நீ முயன்றால் இங்கு உண்மை ஒளி உனக்கு கிடைத்திடுமே  
வார்த்தை இங்கு மனுவானார் நம் வாழ்வினில் என்றும் குடி கொண்டார் 

அன்பு செய்யும் உள்ளங்களே இறைவனின் அருள் பெரும் இல்லங்களே 

No comments: