இறைவா இதோ வருகின்றோம்
உம்திரு உள்ளம் நிறைவேற்ற
கல்லான இதயத்தை எடுத்துவிடு
எமைக் கனிவுள்ள நெஞ்சுடனே வாழ விடு
எம்மையே நாங்கள் மறக்க விடு
கொஞ்சம் ஏனையோர் துன்பம் நினைக்கவிடு
பலியென உணவை தருகின்றோம்
நிதம் பசித்தோர்க்கு உணவிட மறக்கின்றோம்
கடமை முடிந்ததென நினைக்கின்றோம்
எங்கள் கண்களை கொஞ்சம் திறந்து விடு
துளிர்க்கும் விழிநீர் கொணர்கின்றோம்
அதைத் துடைப்பாய் என உனைக் கேட்கின்றோம்
வறியவர் கண்களில் வடிநீரை இன்று
மறந்தோம் எம்மை மாற்றிடுவாய்
No comments:
Post a Comment