Sunday, November 24, 2019

NAAN UNNAI VITTU VILAGUVATHILLAI



நான் உன்னை விட்டு விலகுவதில்லை 
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை 
நான் உன்னை காண்கின்ற தேவன் 
கண்மணி போல் உன்னை காப்பேன் 

பயப்படாதே நீ மனமே - நான் 
காத்திடுவேன் உன்னை தினமே 
அற்புதங்கள் நான் செய்திடுவேன் 
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் 

திகையாதே கலங்காதே மனமே - நான் 
உன்னுடனிருக்க பயமேன் 
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்  - உன் 

கவலைகள் யாவையும் போக்கிடுவேன் 

No comments: