Sunday, November 24, 2019

EZHAI ENNAI KAANIKAIYAAGA



ஏழை என்னை காணிக்கையாக தருகின்றேன் தெய்வமே 
ஏற்று கொள்ளுமே ஏற்று கொள்ளுமே 

என் உயிரும் உடலும் உள்ளமும் 
சிந்தனையும் செயலும் - என் 
உணர்வுகள் உறவுகள் என்னில் 
உள்ள திறமைகள்
யாவும் உந்தன் கருணையின் கொடைகள் 
தந்தாய் ஏற்றுக்கொள் 

என் கடந்த கால வாழ்க்கையும் 
நிகழும் வாழ்க்கையும் - நான் 
எதிர் கொள்ளும் வாழ்க்கையும் 
அதன் வளர்ச்சி தளர்ச்சியும் 
யாவும் உந்தன் கருணையின் கொடைகள் 

தந்தாய் ஏற்றுக்கொள்

No comments: