நன்மைகள் செய்த இறைவனுக்கு
நன்றியின் பலியை செலுத்திட வாரீர் -- 2
நன்மைகள் நாமே அடைவோம் வாரீர்
உள்ளத்தை தருவது திருப்பலியாம்
உகந்த தென்றால் அது பெரும் பலியாம்
கொடைகள் பெறுவது தகும் வழியாம் --2
குறையினை போக்கும் கோவழியாம்
வானத்தை நோக்கும் நறும்புகை போல்
வாருங்கள் உள்ளத்தை அளித்திடுவோம்
அனைத்தையும் அன்புடன் கொண்டு வந்தே -- 2
ஆண்டவர் திருமுன் படைத்திடுவோம்
No comments:
Post a Comment