Tuesday, October 22, 2019

VILAINTHA NILAM AERAALAMAE TAMIL LYRICS

விளைந்த நிலம் ஏராளமே
அறுவடைக்கோ ஆளோ இல்லை
விளைவின் பலன் அழிகின்றதே - 2
அறுத்திடச் செல்வார் யாருமில்லை - 2

1. சமாரியா நாட்டின் விளை நிலத்தை
அறுத்திட இயேசு தானே சென்றார்
என் அருமைச் சீடர்களே - 2
கண்களை உயர்த்தி பாரும் என்றார் - 2

2. கோடி கோடியான ஜனங்கள் இன்று
அழிகின்றார் நரகத்தில் இயேசு இன்றி
என் ஜனங்கள் அழிந்திடாமல் - 2
தடுத்திடுவார் இங்கு யார்தானுண்டு? -

3. உலகினில் வாழ்வது ஒரு தரமே
அதுவும் சீக்கிரம் கடந்திடுமே
கர்த்தருக்காக வாழ்ந்திடுவோம் - 2
இயேசுவை அறிவிக்க புறப்படுவோம் - 2

No comments: