Tuesday, October 22, 2019

Oru vicai mattiram utavi Seyyum

ஒரு விசை மாத்திரம் உதவி செய்யும் என் தேவனே – இந்த
ஒரு விரை மாத்திரம் நினைத்தருளும் – என் தேவனே
விழியிழந்தேன், வழி மறந்தேன்
உலகின் மடியினிலே என்னையிழந்தேன் – ஒரு விசை

சரணங்கள்

1. கண்களுக்கு காவலில்லையே – என்
எண்ணத்திற்கு எல்லையில்லையே
கண்களுக்கு பிரியமாகி
நெஞ்சத்துக்கு இனிமையாகி
வஞ்சகமாய் என்னை அழைத்த்து – உலகம்
நஞ்சு போல் என்னை அழித்த்து – அதினால் – ஒரு விசை

2. நெஞ்சத்திலே தூய்மையில்லையே – இங்கு
கொஞ்சத்திலும் உண்மையில்லையே
கழுதையின் எலும்பெடுத்தால் கதவிய சேனையெல்லாம்
கரங்கொட்டி சிரிக்கின்றதே – கைவிலங்கு ஓரையை இரசிக்கின்றதே – அதினால் – ஒரு விசை

3. முன்னூறு நரிகள் பிடித்தவன் – பெலிஸ்தியர் 
வெள்ளாண்மை கதிர்கள் எரித்தவன்
தூண்களை தடவிடவே 
பிள்ளையாண்டான் உதவிடவே
நசரேய விரதம் விலகவே – என்னை விட்டு
மாகா பெலன் நீங்கி போனவே – அதினால் – ஒரு விசை

No comments: