Tuesday, October 22, 2019

NAAN NADANDHU VANDHA PATAIYILELLAM LYRICS

நான் நடந்து வந்த பாதையிலெல்லாம்

என்னை சுமந்து வந்த நேசர் இயேசுவே
கடந்த கால பாவங்களெல்லாம் – கொடும்
குருசில் சுமந்து தீர்த்த நேசரே

தாயாரின் வயிற்றினில் உருவானமுதல்
என்னை தமக்காக தெரிந்து கொண்டு பிரித்தெடுத்தீர்
ஒரு தகப்பனை போல் - என்னை சுமந்தவரை
தினம் தழுவிடுவேன் - சிறு பிள்ளையைப் போல்
மார்போடு அணைத்தவரை பாடிடுவேன் – முழு
மனதோடு சேர்ந்தவரை துதித்திடுவேன்.

வழிமாறி ஓடி ஒரு ஓடத்திலே
கொஞ்சம் இளைப்பாற நினைத்தேன் அடி தளத்தினிலே
வலக்கரம் கொடுத்து - எனை எடுத்து
மீன் வயிற்றினிலும் - தனி இடங்கொடுத்து
அழியாமல் காத்தவரைப் பாடிடுவேன் – வழி
விலகாது மீட்டவரைத் துதித்திடுவேன்

வெகுதூரம் நடந்தே ஒரு மலையருகில்
நான் களைப்பாற சாய்ந்தேன் சூரைச் செடி நிழலில்
இரு வேளையிலும் கரும் காகம் கொண்டு
சுவை கறியுடனே தினம் அப்பம் கொடுத்து
பசி தாகம் தீர்த்தவரை பாடிடுவேன் – எனக்கு
இளைப்பாறுதல் ஈந்தவரை துதித்திடுவேன்

1 comment:

Unknown said...

I like this song and love this song... lyrics found only in your website..