கொல்கதாவின் குருசினிலே
குருதி வெள்ளம் பாய்ந்திடுதே
கள்ளன் என் பாவம் கழுவிடவே – அவர்
கால் கரம் மார்பினில் கசிகின்றதே
ஈடில்லை இணையுமில்லை
இயேசு என் நேசரைப்போல் எவருமில்லை
உதிரம் வியர்வையாகி மேனியிலே பெருகுதையா
கல்வாரி கொடுமை கண்டு எனது உள்ளம் உருகுதையா
ஏனிந்தபாடுகள் எனக்காய்தானோ – கொல்கொதாவின்
மகிமையின் தேவன் மனிதர் முன்னே
மனங்கசந்தழுது நின்றார் மா – கொடுமை
வாரடி வாதையாலே வாடி சிதைந்த மேனியது
கல்வாரி பார சிலுவை சுமந்து நடந்த பாதையது
ஏனிந்த பாடுகள் உனக்காய் தானோ – கொள்கொதாவின்
பரம சுகம் தரும் உதிரம்
ஊற்றென பாய்ந்திடுதே சிலுவையிலே
காளை வெள்ளாட்டு கடா தீர்த்திடாத பாவவினை
கல்வாரி சிலுவை அன்பு நித்திய லோகம் சேர்க்கும் உன்னை
ஏனிந்த பாடுகள் நமக்காய்தானோ
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா [2]
1 comment:
This song written by pastor vyasar Lawrence
Post a Comment