Wednesday, October 23, 2019

KAALAIYILAI NAATHUNADA PORAPULLA LYRICS

காலையில நாத்துநட போறபுள்ள - 2
ஒரு உற்பத்தி காலத்துள 
ஒரு குழந்தை பொறந்திருக்கும்
உன் சந்ததி செழித்திருக்கும்
உன் சந்தோஷம் நிலைத்திருக்கும்

உன் கணவெள்ளாம் நிஜமாகும்
உன் குறைவெள்ளாம் நிறைவாகும் - 2

கல்யாணமாகி பலவருஷம் பிள்ளையில்லையோ
இந்த ஊருக்குள்ள நீ பழமொழிச் சொல்லானையோ - 2
அன்பே ஆருயிரே உன்னை நடத்திட ஒருவருண்டு 
பொன்னே காவியமே உன்னை விடுவிக்க ஒருவண்டு
உனக்காகத்தானே இயேசு பிறந்தார் 
உனக்காகத்தானே இயேசு பிறந்தார்
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார்
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார்

முத்தம்மா உன்ன மலடினு சொன்னாலோ
உன்ன பெத்தம்மா உன்ன வார்த்தையில் கொண்னாலோ - 2
கண்ணே கண்மனியே உன்னை காண்கின்ற தேவன் உண்டு
பூவே பூச்சரமே உன்ன தேற்றிட தேவன் உண்டு
உனக்காகத்தானே இயேசு பிறந்தார் 
உனக்காகத்தானே இயேசு பிறந்தார்
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார்
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார்

இராசி இல்லாத பொண்ணுனு சொன்னாங்களோ
உதவாத கல்லாய் துக்கி எரிஞ்சாங்களோ
நிலவே பொண்நிலவே உன்னை நினைக்கின்ற தேவன் உண்டு
குயிலே கருங்குயிலே உன்னை காத்திட கரங்களுண்டு
உனக்காகத்தானே இயேசு பிறந்தார் 
உனக்காகத்தானே இயேசு பிறந்தார்
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார்
இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பார்

No comments: