Wednesday, October 23, 2019

UMMAIYE VITTU NAAN DHOORAM LYRICS

உம்மையே விட்டு நான் தூரம் சென்றேனே
ஆனாலும் என்னை நீர் கைவிடவில்லையே
உமது கரத்தை நீட்டியே என்னை
பாவத்தில் இருந்து தூக்கியெடுத்தீர்

1. கலங்கி நின்ற என்னையுமே
கரம் பிடித்து சென்றீரே
எண்ணிலடங்கா நன்மையுமே
எந்தன் வாழ்வில் செய்தீரே
பரிசுத்த தேவனே [இயேசுவே]
நன்றி நன்றி ஐயா

2. பாதை தேடி அலைந்த என்னை
புதிய பாதையில் நடத்திநீரே
வாழ்க்கை இழந்து தவித்த என்னை
புதிய வாழ்க்கை தந்தீரே
பரிசுத்த தேவனே [இயேசுவே]
நன்றி நன்றி ஐயா

No comments: